ஞாயிறு, அக்டோபர் 25, 2015

ஆர்ப்பாட்டம்

NFTE-BSNL, PUDUHERRY
சுற்றறிக்கை:- எண்2/-தேதி 25/10/2015
ஆர்ப்பாட்டம்
நாள்:-28/10/2015 *   அலவலகம் முன் *புதன் கிழமை* மாலை:0530 மணி

மாவட்டநிர்வாகமே !

1)   விடுமுறை நாட்களின் மிகுதி நேரப்படி புதிய ERP காரணமாக பில் தயார் செய்யப்படவில்லை. திருச்சிற்றபலம் பகுதிக்கு அதிகாரி இல்லாத காரணத்தால் ஒரு வருடமாக தேக்கநிலை எல்லா விதத்திலும், மிகுதிநேரம் உட்பட நிலவுகிறது. மிகுதி நேரப்படி தீர்வு காண நிர்வாகத்தை அணுகிணால் C.OFF எடுக்க ரகசிய செய்தி அதிகாரிகளுக்கு அனுப்படுகிறது. மிகுதி நேரப்படி உயர்த்தி வழங்க தேசியகுழுவில் பரிசீலிக்க ஏற்க்கப்ப்ட்டநிலையில் இந்த மிகுதி நேரப்படி மறுப்பு ஏற்க்கமுடியாது.இல்லையென்றால் அனைத்து விடுமுறை நாட்களிலும் விடுப்பு எடுத்து பணி மறுப்பு செய்ய நேரிடும்.
2)   செப்பல் வழங்க ஆகஸ்ட் 8 /2015 ல் உத்தரவு வெளியிட்டும் அதிகாரிகள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி வருகின்றனர்,
3)   சங்க அலுவலகத்திற்க்கு கம்பியூட்டர் வழங்க அலைகழிக்கப்பட்டு வருகிறது.பழைய கம்பியூட்டர் என்றால் பழது பார்க்கும் நிர்வாக AMC கோரியதற்க்கு பதில் ஏதுமில்லை. கம்பியூட்டர் நிர்வாகசொத்து என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம்.ஓய்வுபெறும் பொழுது பணம் செலுத்தாமல் வீட்டுக்கு எடுத்து செல்ல LAPTAP கோரவில்லை.

ஊழியர்களின் கோரிக்கை மீது மட்டும் மெத்தனமாக இருந்து விட்டு பின்னர் ஒத்துழைப்பு மட்டும் கோருவது நல்லதல்ல எனபதை தெரிவித்து, நமது எதிர்ப்பை காட்டிட அனைவரும் திரண்டு வருவோம்.

வாழ்த்துக்களுடன்,

தோழமையுள்ள,

மா.செல்வரஙம்,மாவட்டசெயலர்.

GPF பணம் பட்டுவாடா நமது மத்திய,மாநிலசங்க பெரும் முயற்சிக்குபின்னர் 27/10/2015 ல் நடைபெறும். தீபாவளி விழாக்கால முன்பணம் வங்கிக்கு அனுப்ப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக