வெள்ளி, ஏப்ரல் 19, 2013

தேர்தல் குறித்து


தோழர்களே,

நடந்து  முடிந்த  ஆறாவது  உறுப்பினர்  சரிபார்ப்பு  தேர்தலில் 61915  வாக்குகளை  பெற்று  நமது  NFTE  சங்கம்  இரண்டாவது  சங்கமாக   அங்கீகாரம்  பெறுகிறது.  99380  வாக்குகளை  பெற்ற  BSNLEU  சங்கமும்  நமது   சங்கமும்  பேச்சுவார்த்தைஉடன்பாடு  போன்ற  விஷயங்களில்  சம  அந்தஸ்து  உள்ளவையாக  இருக்கும்.  வாக்குகளின்  அடிப்படையில்  JCM - இல்  SEATS  பகிர்ந்தளிக்கப்படும். 8, 6 என்ற எண்ணிக்கையில் இது அமையக்கூடும். NFTE -யிலிருந்து  JCM  தலைவரும்,  BSNLEU-விலிருந்து  செயலரும்  இருப்பர். 
தமிழ்  மாநிலத்தில் NFTE சங்கம் முதலிடம் பிடித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு வாக்குச்சீட்டுகளை வெறுமனே மடித்து பெட்டிக்குள் போட்டுவிடுவது, BSNLEU தவிர்த்த வேறு சங்கத்திற்கு வாக்குப்போடுவது போன்ற திட்டமிட்ட துரோகச்செயல்களையும்  மீறி,   தோழர்  பட்டாபி  தலைமையில்  மீண்டும்  NFTE  சங்கம்  BSNLEU-வை  விட   கூடுதல்  வாக்குகள்  பெற்றுள்ளது.  மாநிலத்தில்  சுற்றுபயணம்  செய்த  அகில   இந்திய  நிர்வாகி -  தலைவர்  தோழர்  இஸ்லாம்  அவர்களுக்கு  நன்றி.-வேலூர்  வலைத்தளம் 

அந்த கருப்பு ஆடுகள் யார் ?

                                             
Who is that Black Sheep !?
ஒவ்வொரு மாவட்டத்திலும் பேர் சொல்ல ஆள் இல்லாதபோலி சங்கத்திற்கு 

கணிசமான வாக்குகள் விழுந்துள்ளது திட்டமிட்ட செயலா ? என்று பெருத்த 

சந்தேகத்தை கிளப்பி உள்ளது. 

கோவையில் சுமார் 50 NFTE வாக்குகள் போலி (கோலி) சங்கத்திற்கு ! 

திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இதே நிலை !! 

நமது மாவட்ட சங்கத்திற்கு வரவேண்டிய வாக்குகளை குறைக்க நடந்த சதியா என்பது தீர ஆராயப்பட வேண்டிய செயலாகும்.   கோவை வலைத்தளம் 

ஈரோட-வலைதளம் 
வாக்குமூலம்?

புதிய அங்கீகார விதிகளின்படி இது முதல் தேர்தல். முதல் இரண்டு சங்கங்கள் அங்கீகாரத்துடன் செயல்பட ஊழியர்கள் உத்திரவிட்டுள்ளனர். அவர்களின் முடிவினை ஏற்போம். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு செயல்பட உறுதியேற்போம். போட்டியிடும் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதோர் பயன்படுத்த  பொதுத் தேர்தலில் 49(ஓ) என்ற வாய்ப்பு தரப்பட்டது. அதைப் போலவே இந்த தேர்தலில் எண் 14 பயன்பட்டுள்ளது. நாடு முழுமையும் அந்த எண்ணிற்கு வாக்களித்துள்ளனர். இது ஏன் என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. அதை துரோகம் என்று உதாசீனப்படுத்துவது சரியல்ல.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் காக்க, ஊழியர் நலன் காக்க உறுதியான நடவடிக்கைகளை உடனே துவங்குவோம். அதுவே அனைவருக்கும் நல்லது.



புதுவை வலைத்தளம் 


புதுவை வெற்றி  நம்மிடமிருந்து  பறிக்கப்பட்டது.காரணம்கருத்து 

வேறுபாடுகள்   தேர்தலுக்கு  முன்னரே  பல  ஊழியர்கள்  சுட்டி  காட்டிய பொழுதும்  நாம்  

நம்பிக்கையுடன்  இருந்தோம் .கருத்து வேறுபாடுகள்  தேர்தல்  வெற்றியை பறித்து 

விடக்கூடாது  என பொறுமை காத்தோம்.போட்டி செயல்பாடு  தேர்தல்  வெற்றியை


பாதித்து விடக்கூடாது  என்  அமைதியாகஇருந்தோம்.


புதுவை, கடலூர்  அத்துமீறல்கள்  வெகுவாக  வெற்றியை  பாதித்துள்ளது.தமிழ்நாட்டில் 

திட்டமிட்ட துரோகச்செயல்களையும்  மீறி,   தோழர்  பட்டாபி  தலைமையில்  மீண்டும்  NFTE  சங்கம்  BSNLEU-வை  விட   கூடுதல்  வாக்குகள்  பெற்றுள்ளது .எல்லா 


எல்லைகளையும்  தாண்டிய  போட்டி ,பாதக  செயல்பாடுகள்  குறித்து  நடவடிக்கை 

 தேவை  என்ற நிலையை  உருவாக்கியள்ளது .