வெள்ளி, அக்டோபர் 31, 2014

காலவரையற்ற வேலை நிறுத்தம்

காலவரையற்ற  வேலை நிறுத்தம்
அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் 
சங்க கூட்டமைப்பு  முடிவு

28/10/2014 அன்று  அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் 
சங்க கூட்டம் டெல்லியில் NFTE  அகில இந்தியத்தலைவர் தோழர்.இஸ்லாம் அகமது தலைமையில் நடைபெற்றது. 
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.


·                     DELOITTE குழு அறிக்கையை எதிர்த்து..
·                     BSNL மற்றும் MTNL  இணைப்பை எதிர்த்து.. 
·                     தனியாக TOWER COMPANY ஆரம்பிப்பதை எதிர்த்து...
·                     மத்திய அரசின் BSNL விரோத பொதுத்துறை விரோத     கொள்கைகளை எதிர்த்து 
03/02/2015 முதல் 
நாடு தழுவிய கால வரையற்ற 
வேலை நிறுத்தம்
டிசம்பர் 2014ல் கோரிக்கை தினம்
ஜனவரி 2015ல் 3 நாட்கள் தர்ணா
நாடு தழுவிய போராட்ட விளக்க கூட்டங்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கைவிளக்குதல்
நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் கூடி மற்ற நடவடிக்கைகளை இறுதிப்படுத்துதல்.
தோழர்களே....ஊழியர் நலமுற்றிடBSNL வளம் பெற்றிட..

களம் காண்போம்..இதுவே தருணம்...