புதன், ஜூன் 26, 2013

சிலர் எண்ணங்கள் ,சிலர் வசவுகள்

சிலர்  எண்ணங்கள் ,சிலர்  வசவுகள் 

மாநில  செயற்குழு கூட்டத் திற்க்கு  முன் 24 ம்  தேதியே  சன்னிதானம்  சென்று முறைப்படி பெறவேண்டிய கட்டளைகள்  பெறப்பட்டு அதன் வழியே  மாநில  செயற்குழு  கூட்டம் துவங்கிய முதலே tuned அலைவரிசை  ஒலிக்க துவங்கியது .மாநில  செயற்குழு  கூட்டம் நடைபெறாமல்  இருக்க  ஏற்பாடு  செய்யப்பட்டது .இந்த முயற்சி செயற்குழு  உறுப்பினர்கள்  உறுதியினால்  தடுக்கப்பட்டது.எந்த  பிரச்சனையையும்  பேசலாம்  என  அழைக்கபட்டபின்னரும்  மறுத்து 
பின்னர் பேசி  அலைவரிசை உத்திரவு  அடிப்படையில்  வெளிநடப்பு  நடைபெற்றது.

தோழர்களை ,மீண்டும்  மீண்டும் பலமுறை  வேண்டியும்  மேல்  ஒப்புதல் கிடைக்காத நிலையில்  வெளியேறினர் . பலமுறை  வேண்டியும் உணவு 
அருந்த  மறுத்து  அவர்களது  நிகழ்ச்சி நிரலை  ஒளிபரப்பினர் .

கடலூர் தோழர் ஸ்ரீதர் மீது வசவுரை  மட்டுமே  வாழ்த்துரையாக மாநில  செயற்குழு கூட்டத் திற்க்கு கிடைத்தது பாக்கியமே ?  

ஒருதலை  விசுவாசம்  காரணமாக அடுத்தவருக்கு  மட்டுமே  உபதேசம்  என்பது  விசுவாச விமர்சனம் . அவர்  மன்னித்தாலும் ,மன்னிக்காமல் விட்டாலும்  நாம் அவரது விசுவாச விமர்சனத்தை  ஏற்ப்பதில்லை -

ஆமேன் !


தமிழ் மாநிலச்சங்கசெயற்குழு

தமிழ் மாநிலச்சங்கத்தின்  செயற்குழு  வேலூரில்  25.06.2013  காலை  10.30  மணிக்கு  மாநிலத்தலைவர்  தோழர்.நூருல்லா  தலைமையில்  துவங்கியது.  கொடியேற்றம்  முடிந்து  ஆய்படுபொருள்  ஏற்புக்கு  வைக்கப்பட்ட  பின்ஏற்கப்பட்ட ஆய்படு பொருளினைப்பற்றி  மாநிலச்செயலர்   சுருக்கமாக  விளக்கி  விவாதத்தினை  துவக்கிவைத்தார்.  உடனடியாக  சில  தோழர்கள்  எழுந்து  ஓய்வு  பெற்றவர்கள்  தொழிற்சங்க  பதவிகளில்  இருக்கக்கூடாது  என்று  கூறி,   சிறப்பு  பிரதிநிதிகளாக  மதுரை  மாநாட்டில்  தேர்வு  செய்யப்பட்ட  தோழர்கள்  சேதுஜெயபால்  ஆகியோரை  உடனடியாக  பதவி  நீக்கம்  செய்தாக வேண்டும்  என்று  வலியுறுத்தி  கண்டன  ஆர்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.  அதனைப்பற்றி  அமைப்பு நிலையில்  விவாதிக்கலாம்   என்று  தலைவரும்  மாநிலச்செயலரும்  கூறிய  பின்னரும்  இது  தொடர்ந்தது.  அதன்  பின்னர்  தோழர்  செல்வசுப்ரமணியம்  பேசினார்.  திரும்பவும்  சிறப்பு பிரதிநிதிகள்  பிரச்னையை  எழுப்பி  பணி  ஓய்வுபெற்ற  இருவரை  அப்போதே  பதவி  நீக்கம்  செய்ய வேண்டி  13  தோழர்கள்  வெளிநடப்பு  செய்தனர்.  அவர்களை  உள்ளே  வருமாறு  அழைக்கச்சென்ற  குழுவிடம் மேலும்  சிலரை  சிறப்பு பிரதிநிதிகளாக சேர்த்தால்  தாங்கள்  உள்ளே  வருவதாக  ஒரு  சிலர் கூறினர்.  திடீரென  வந்த  ஒரு  தொலைபேசி  அழைப்புக்குப் பின்  அந்த  13  தோழர்களும்  மண்டபத்தை  விட்டு 1.30க்கு சென்றுவிட்டனர்.
அதன் பின்தடையின்றி  ஆய்படு  பொருளினை ஒட்டிய  விவாதம்  தொடர்ந்தது. நடந்து  முடிந்த ஆறாவது  உறுப்பினர்  சரிபார்ப்பு தேர்தல், ஜூன்  12  வேலை  நிறுத்தம், 78.2 சத கிராக்கிப்படி இணைப்பு, 2007 - க்குப்பின்  பணியில் சேர்ந்த  ஊழியருக்கு அதன் பலனை  கிடைக்கச்செய்வதுகிராக்கிப்படி இணைப்பினால் எழுந்துள்ள  ஊதியத்தில்  தேக்கம், 78.2-  ஒய்வூதியர்களுக்கும் விஸ்தரித்து உத்தரவு, மாநிலக்கவுன்சில்மாவட்டக்கவுன்சில் நியமனங்கள்,  JTO  தேர்வில்  பாட வரையறைக்கு  வெளியிலிருந்து கேள்விகள்சேலம், ஈரோடுமதுரை  ஆகிய  மாவட்டங்களின் TTA தேர்வு  முடிவுகள்,  BSNL / MTNL மீதான  அமைச்சர்கள் குழு, போனஸ், மகளிர் பிரச்ச்னைகள்அலவன்சுகள்அமைப்பு  விதிகளுக்கு  முரணாக  மாநிலத்தில்  வெளியிடப்படும் சுற்றறிக்கைகள்வலைதள அவதூறுமாநிலச்செயலர்  கிளையின் ex-officio delegate என்பதை மறந்து அவருக்கு அறிவிப்போ  தகவலோ  இன்றி  கிளை  மாநாடுகளை  நடத்தும்  போக்கு  ஆகியன  பற்றி  நீண்ட  விவாதங்களுக்குப் பின்  தீர்மானங்கள்  இயற்றப்பட்டன.

மாலையில்மேல்மட்டச்செய்திகளையும், ஜூன்  12 வேலைநிறுத்த அறிவிப்புஅதன் மீதான  தீர்வுகிராக்கிப்படி  இணைப்பு  ஆகியன பற்றி  விரிவாகப்பேசுவார்  என  பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட  சம்மேளனச்செயலர்  தோழர் ஜெயராமன் கடலூர்  மாவட்ட  பிரச்னைகளை  மட்டுமே  பேசினார்.  கடலூர்  மாவட்ட  மாநாட்டை  ஒட்டி  எழுந்துள்ள  பிரச்னைகளை  ஆய்வு  செய்ய  மாநிலச்சங்கம் ஒரு  ஆய்வுக்குழு  அமைக்க  வேண்டும்  என்று  கூறி  அவர்  உரையினை  முடித்துக்கொண்டார்.இரவு  9.15  வரை  மாநில  செயற்குழு  நடைபெற்று  வெற்றிகரமாக  முடிந்தது.  பயனுள்ள,   ஆக்கபூர்வமான  ஒரு  செயற்குழுவினை  நடத்த  வேலூர்  மாவட்டசங்கத்திற்கு  வாய்ப்பளித்த  மாநிலச்சங்கத்திற்கு  நன்றிகளை  உரித்தாக்குகிறோம்.