வியாழன், ஏப்ரல் 23, 2015

15/04/2015-மாவட்ட செயற்குழு கூட்ட முடிவுகள்

NFTE- BSNL-புதுச்சேரி மாவட்டசங்கம்.
15/04/2015-மாவட்ட செயற்குழு கூட்ட முடிவுகள்

1)    மாவட்ட மாநாடு வரும் மே-2015 இறுதியில் நடத்திட முடிவு செய்யப்பட்ட்து. இதற்க்கான அறிவிப்பை சங்கவிதிகளின்படி வெளியிட செயற்குழு முடிவு செய்யப்பட்டது. மாநாடு சார்பாளராக சந்தாபிடித்தம் உள்ள அனைத்து உறுப்பினரும் கலந்துகொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.சார்பாளர் கட்டணம் ரூ100 வசூலிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
2)    மாவட்ட பொருளர் ராஜினாமா ஏற்கப்பட்டு தோழர் வி.தேவதாஸ் புதிய பொருளராக ஒரு மனதாக தேர்ந்தடுக்கப்பட்டார்.
3)    தோழர்கள் மகேஸ்வரன், அரிஹரன், ராஜினாமா ஏற்காமல் தோழர்களிடம் மாவட்டசங்க முடிவை கூறி பதவி விலகலை வலியுறுத்தவேண்டாம் என்பதை தெரிவிக்க மாவட்டசெயற்குழு கீழ்கண்ட குழுவை அமைக்கிறது. தோழர்கள் தண்டபாணி,தங்கமணி,செல்வரங்கம், புஸ்பராஜ்,ஞானசுந்தரம் ஆகியோர் கொண்டகுழு அமைக்கப்படுகிறது.
4)   இண்டோர்கிளையின் முறையான மாநாட்டை மாநிலசஙகம் அமைப்பு விதிகளின் படி நடத்தித்ருமாறு வேண்டிக்கொள்கிறது.
5)    மாவட்டசங்க பணம் ரூ1,550,02/= தோழர் அசோகராஜன் பெயரில்  சென்னை டெலிகாம் சொசைட்டியில் உள்ளதை மாவட்ட மாநாட்டிற்க்குமுன்  மாவட்ட சங்கத்திடம் ஒப்படைக்க செயற்குழு வேண்டுகிறது.
6)    மே தின கொடியேற்றம் அனைத்து தொலைபேசி நிலையங்களிலும் நடத்திட திட்டமிடவேண்டுகிறது.
7)    ஏப்ரல்21,22  வேலை நிறுத்தத்தில் பங்கேற்று  வெற்றிகரமாக நடத்திட, உறுப்பினர்களை செயற்குழு வேண்டிக்கொள்கிறது.

இண்டோர் பகுதி பவர்பிளாண்ட்,TD ஊழியர்களுக்கு பவர் க்ஷூ வழங்கிட மாவட்டநிர்வாகம் மறுத்த நிலையில் மாநிலநிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு தற்போழுது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இண்டோர் பகுதி செப்பல் ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும்.

வேலைநிறுத்தத்தில் வெற்றிகரமாக பங்கேற்ற அனைவரையும் மாவட்டசங்கம் பாராட்டுகிறது.

ப.காமராஜ், மாவட்டசெயலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக