புதன், ஜனவரி 08, 2014

QUPTHA -DEATH ANNIVERSARY

















கடலூர் ஒலிக்கதிர் பொன் விழா 06/01/2014

கடலூர் ஒலிக்கதிர் பொன் விழா 06/01/2014 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.50 ஆண்டு ஒலிக்கதிரின் வழிதடத்தை,ஒலிக்கதிரின் சிந்தனையை, மாண்பை விளக்கும் பல வண்ண தட்டிகள்,அதன் வரிகள் காலத்தை தாண்டி மனதை வருடும். அழகு மிளிர,கொள்ளை கொள்ளும் ஏற்பாடுகள், மாவட்டத்தில் எல்லையில்லா துன்பங்கள்,பெற்றிடுனும் ,சிலர் ஒதுங்கிட,தடுத்திட நிதி வழங்க மறுத்திட, என சோதனை வந்த பொழுதும் கண் துஞ்சாது பணி புரிந்து சோர்வில்லா இளைஞர் பட்டாளம் உழைத்திட வெற்றி பெற்ற ஒலிக்கதிர் பொன் விழா காலத்தை விஞ்சி நினைவுகள் நிற்க்கும்.
அணி பாரது, சங்க பேதம் மின்றி அனைவர்க்கும் பதாகை, விண்ணதிர சங்க கொடியேற்றம், தோழர் ஜெயபால்  குப்தா நினைவு அஞ்சலி,
தோழர் ஆர்.கே துவக்க உரை,மாநிலசெயலர் சிறிய,சீரிய உரை சிறப்புரை என தலைவர்களின் அணிவகுப்பு, சிறப்பு சேர்த்த அவர் தம் உரை, நிஜ நாடகம், கவிஅரங்கு எதிர் பார்ப்பை விஞ்சிய, வரவேற்புகுழு திணறும் அளவு தோழர்கள் பங்கேற்ப்பு, தோழர் தா.பாண்டியன் காலை முதல் கண்டு ரசித்து மாலை நிறைவு பேருரை நிகழ்த்திய பாங்கு என சிறப்புகளை பட்டியல் இட்டாலும்  நினைவை அகலாத கடலூர் ஒலிக்கதிர் பொன் விழா காலத்தை விஞ்சி நிற்கும்.
சின்னபையன் என எகடியம் செய்து ,விளித்தாலும் சின்னபையன் நான் அல்ல சீர்மிகும் ,விஸ்வரூபம் காட்டிய வாமனன், வாமனன் என நிரூபித்த எனது அன்புதோழன் ஸ்ரீதர் ,மற்றும் தோழர்களுக்கு நன்றி.









 


 
 


புதுவையில் இருந்து 8 தோழியர்கள் உட்பட்90 பேர் கலந்துகொண்டனர்.அனைவர்க்கும் நமது நன்றிகள்.

செவ்வாய், டிசம்பர் 31, 2013

ஞாயிறு, டிசம்பர் 29, 2013

Sr.TOA (G) பதவி உயர்வுக்கான தகுதித்தேர்வு..

நீதி கிடைத்தது ...வென்றது தமிழ் மாநில சங்கம்...
 Sr.TOA (G) பதவி உயர்வுக்கான தகுதித்தேர்வு...  

  

நமது துறை BSNL ஆன 2000 இறுதியிலிருந்து 
TOA வின் பல (TOA(G),TOA(P),TOA(TG), TOA(TL) பிரிவுகளுக்கு,  
பரிவு அடிப்படையில்  பணியமர்த்தப்பட்ட    நூற்றுக்கணக்கான  ஊழியர்கள் Sr.TOA ஆக முடியாத நிலை நீடித்துவந்தது.

நமது தமிழ் மாநில சங்கத்தின் தொடர் முயற்சியால்
விடுபட்டுப்போன TOA தோழர்களுக்கு Sr.TOA தேர்வு,
 2011 ஆகஸ்ட் 28  அன்று நடைபெறும் 
என மாநில நிர்வாகம் அறிவித்தது.

18 மாவட்டங்களுக்கான Sr.TOA காலியிடங்கள் 
மாநில நிர்வாகத்தால் 26-04-2011 அன்று வெளியிடப்பட்டது.  
அதில் TOA (G) பிரிவுக்குமட்டும் 155 காலியிடங்கள்
 ( Walk in Group: 91, Screening Test : 64)
என காட்டபட்டு தேர்வும் நடைபெற்றது.

3 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 64 தோழர்கள் தேர்வு 

எழுதினர். தேர்வில் 25 தோழர்கள் மட்டுமே தேர்ச்சிபெற்றனர். 
தேர்வில் தேர்ச்சி பெற்ற 25 தோழர்களும், Walk in Group இல் உள்ள 91 தோழர்களும் Sr.TOA பயிற்சிக்கு அனுப்பப்பட்டு பதவிஉயர்வும்  பெற்றனர்.

 TOA வின்  மற்ற பிரிவு மூத்த தோழர்களும், 
தேர்ச்சி பெறாத தோழர்களும் ஏறத்தாழ 12 ஆண்டுகளாக... 
Sr.TOA ஆக முடியாத நிலை நீடித்து வந்தது.

   நமது தமிழ் மாநில சங்கத்தின் தொடர் முயற்சியாலும்,
மாநில கூட்டு ஆலோசனை குழுவின் (RJCM) 
விவாத பொருளில் இந்த கோரிக்கையை 
வைத்த காரணத்தினாலும்...

 TOA வின்  எல்லா பிரிவு தோழர்களும்
   Sr.TOA(G) பதவி உயர்வுக்கான தகுதி தேர்வு எழுதிடவும், 
அதற்கான தேர்வு 30-03-2014 அன்று நடைபெறும்.
என மாநில நிர்வாகம் 27-12-2013 அன்று உத்திரவு வெளியிட்டுள்ளது.

12 ஆண்டுகளாக எதிர் பார்த்திருந்த தோழர்களுக்கு நீதி கிடைத்தது...  வென்றது தமிழ் மாநில சங்கம்...  
      பதவி உயர்வு பெறும் இந்த உத்தரவை பெற்று தந்த...
தமிழ் மாநில சங்கத்திற்கும்...
தமிழ் மாநில கூட்டு ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கும்...
    நமது நன்றி...பாராட்டுக்கள்...         
ஒற்றுமையும்...நல்ல துவக்கமும்...தொடரட்டும்... வாழ்த்துக்கள்...