சனி, செப்டம்பர் 28, 2013

மத்திய செயற்குழு

ஜுனகட் நகரில்  செப் -24/25 தேதிகளில் மத்திய செயற்குழுக்கூட்டம் நடை பெற்றது. நமது மாவட்டத்தில் இருந்து19 தோழர்கள் கலந்து கொண்டனர்.
சஙக கொடிஏற்றத்திற்க்கு பின் மத்திய செயற்குழு துவக்கத்தில் ஆய்படு பொருள் இணைப்பு குறித்து விவாதம் எழுந்து பின்னர் அனைத்து பிரச்சனைகளையும் இன்ன பிற தலைப்பில் விவாதிக்கலாம் என் பொதுசெயலர் அறிவித்தார், ஆனால் அவைளை விவாதிக்கயாரும் இல்லை.
தமிழக மாநிலசெயலர் தோழர்.பட்டாபி தனது பாணியில் பிரச்சனைகளை  பட்டியலிட்டு தீர்வுக்கு முன் வைத்தார். அ.இ.சஙக நிர்வாகி தோழர்.S.S.G. தமிழக நிகழ்வுகள்,அத்துமீறல்கள் குறித்து பேசினார்.தமிழக மாநில சில தோழர்களின் அறிக்கையை பல மாநிலசெயலர்கள்.பொதுசெயலர்  கண்டித்தனர்.
இறுதியில் பேசிய பொதுசெயலர்  எல்லா கருத்துகள்,குற்றசாட்டுகளுக்கு, தனது வெளிப்படையான பேச்சு மூலம் பதில் அளித்தார்.
தமிழக மாநிலசெயலர் தோழர்.பட்டாபி  தலைமையில் அமைந்த குழு போராட்ட கோரிக்கைகள்-குறிந்து விவாதித்து பரிந்துரை செய்தது.
கடும் மழை ,நல்ல ரம்மியமான இடம் ,வரவேற்ப்புக்குழு ஏற்பாடுகள் நல்ல முறையில் இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக