சனி, பிப்ரவரி 28, 2015

SSG பணி ஓய்வு பாராட்டுக்கள்


வாழ்த்துகிறோம் 
SSG பணி ஓய்வு பாராட்டுக்கள்
   
 SSG என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் தோழர்.S.S.கோபாலகிருஷ்ணன் 23/12/1976-ல் குன்னூரில் தொலைபேசி இயக்குனராக பணியில் சேர்ந்தார். கல்லூரி வாழ்க்கை முடித்து பல கற்பனைகளுடன் சராசரி மனிதனா தொலைபேசி இயக்குனராகத் தன் பணியினை தொடர்ந்தார்பல தலைவர்களை உருவாக்கிய குன்னூர் மண்ணில் அவருக்கு ஆதர்சமாக தோழர்.ராமலிங்கம்,தோழர்.சுந்தரம் அப்போது அவரின் முன்னோடிகள்.அவர் கலந்து கொண்ட முதல் மாநாடு மயிலாடுதுறை மாநாடு அப்போது தான் தோழர்.ஜெகன், தோழர்.குப்தா போன்ற தலைவர்களை சந்திக்கின்ற வாய்ப்பினை பெற்றார்அவரிடத்தில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றதுபொள்ளாச்சிக்கு மாற்றலாகி தொழிற்சங்கப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டு தனது சிறப்பான செயல்பாட்டால் பல இடதுசாரி தலைவர்களின் பரிச்சயம் ஏற்படுகிறது. MLA கருப்பையா போன்ற தலைவர்கள் அவரின் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர்மத்தியமாநில அரசு ஊழியர்வங்கி ஆகிய சங்கங்களின் கூட்டமைப்புக்கு தலைவராக பணியாற்றி உள்ளார்.
                கோவைக்கு மாற்றலாகி மாவட்ட செயலராக பொறுப்பேற்ற போது தமிழகமே வியக்கும் வண்ணம் பல நிகழ்வுகள் கோவையில் நடந்தது. சங்கத்தில் எதிரும் புதிருமாக இருத்த பல தலைவர்களை NFTE சங்கத்தில் இணைத்த பெருமை SSG-யை சாரும்தோழர்கள் VRC,சந்தானராஜ்முருகேஷ் ஆகியோரை மட்டுமில்லாது 200க்கும் மேற்பட்ட தோழர்களை சங்கத்தில் இணைத்த பெருமை தோழர்.SSG யை சாரும்அவர் மாவட்ட செயலராகவும் தோழர். ராபர்ட்ஸ் மாவட்டப் பொருளாளராகவும் இருந்த போது மத்திய சங்கத்திற்கு கம்யூட்டர் வழங்கப்பட்டதுஇன்று கூட கோவையிலிருந்து அனுப்பப்பட்ட கம்யூட்டர் தான் மத்திய சங்க அலுவலகத்தில் செயல்படுகிறது.கோவையில் நடைபெற்ற மாநில மாநாட்டின் போது மாநில நிர்வாகியாக தேர்வு செய்ய வேண்டுமென்று பலர் நினைத்த போது கோவையில் பொறுப்பிலிருந்த ஒரு சிலர் அவருக்கு பொறுப்பு அளிக்க கூடாது என்று உறுதியாக எதிர்த்த போது 2007  சவுரான்பூரில் நடந்த மாநாட்டில் அகில இந்திய அமைப்பு செயலராக  தேர்வு செய்யப்பட்டார்.
2014 ம் ஆண்டு ஜபல்பூரில் அகில இந்திய மாநாட்டில் அகில இந்திய செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்அது அவரது திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகும்மத்திய செயற்குழு கூட்டங்களில் தமது கருத்தை நன்கு பதிவு செய்து கூட்ட முடிவுகளை செழுமைப்படுத்துவதாக அவரது பேச்சு அமையும்.பொறுப்புக்கேற்ற அவரின் செயல்பாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்வது, அகில இந்திய சங்கத்திற்கு உறுதுணையாக இருப்பது ஒரு நல்ல முன்னுதாரணம்.

 சங்க அங்கீகாரத் தேர்தலுக்காக கடலூர் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அகில இந்திய தலைவர் தோழர். இஸ்லாம் வந்த போதும்கடலூரில் ஒலிக்கதிர் பொன்விழா நடந்த போதும்மீபத்தில் கடலூரில்அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்த போது நமது பொதுச் செயலர் தோழர். C.C.சிங் அவர்களோடு வந்திருந்து தலைவர்களை உபசரிக்கும் பணியை வரவேற்புக் குழுவுக்கு எளிமையாக்குவதில் தோழர்.SSG பங்கு பிரதானமாகும்அதற்காகவே  நமது மாவட்ட சங்கம் அவருக்கு நன்றியை தெரிவிக்கிறது.
குறிப்பாக இரண்டு விஷயங்கள் சொல்லவேண்டும்ஒருமுறை கோவையில் TMபோஸ்ட்டிங்  போடும் போது  GM அவர்கள் அனைத்து சங்க தலைவர்களையும் அழைத்து எந்த எந்த இடங்களுக்கு ஆட்கள் தேவை என்று justification செய்து அனைத்து சங்க தலைவர்களின் ஒப்புதல் பெற்று உத்தரவு வெளியிட தயாராகியது. அந்நேரத்தில் தோழர்.SSG கலந்து கொள்ளமுடியாத சூழலில் அவர் வந்தவுடன் நடந்தவற்றை மற்றவர்கள் எடுத்து சொல்ல அவர், ”அதை ஏற்கமுடியாது அதிகமான TM தோழர்களை வெளியூருக்கு மாற்றக்கூடாது” என GM-இடம் வலியுறுத்தினார். இதனால் பல தோழர்களின் வெளியூர் மாற்றல் தவிர்க்கப்பட்டது.
            மற்றொரு சமயம் TM மாற்றல் செய்வது ம்பந்தமா  தோழர்கள்உண்ணாவிரதம் இருந்தபோது கேரளாவில் இருந்த SSG-யின் சகோதரி இறந்த செய்தி கேட்டு நீங்கள் போராட்டம் நட்த்துங்கள் என்று சொல்லி அவசரமாக கேரளாவுக்கு விட்டு சென்றார்அன்று மாலையே யாரும் எதிர்பாராத விதமாக சிதைக்கு தீ மூட்டிவிட்டு உண்ணாவிரத பந்தலுக்கு வந்து போராட்த்தை ஊக்கப்படுத்தி பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட செய்தார்இன்றும் ஊழியர் மத்தியில் உயர்வாக நிற்பதற்கு அனைத்து அதிகாரிகள் ழியர்கள் சங்க வித்தியாசமின்றி அனைவரிடத்திலும் பழக கூடிய உயர்ந்த பண்பாளராக திகழ்கின்ற SSG அவர்கள் பல இளம் தோழர்களுக்கு முன்னோடியாவார் அவர் பணி நிறைவு நாளில் (28-02-2015) நமது மாவட்டத்தின் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
தொடரட்டும் SSGயின் பணி!

வெள்ளி, பிப்ரவரி 27, 2015

மார்ச் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு :

மார்ச் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு :
மார்ச் மாதம் 17-ம் தேதி முதல் நடைபெறவிருந்த காலவரையற்றவேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் வேலை நிறுத்தமாக மாற்றப்பட்டு ஏப்ரல் 21, 22 தேதிகளில் நடைபெறும் என FORUM அறிவித்துள்ளது.
வேலை நிறுத்த நோட்டிஸ் மார்ச் 12-ம் தேதி தரப்பட்டும். அன்று நாடு முழுதும் கோரிக்கைகளை தீர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

புதன், பிப்ரவரி 25, 2015

பாராளுமன்ற பேரணி 25/02/2015




பாராளுமன்ற  பேரணி  25/02/2015 அன்று டில்லியில்   பெற்றது .
தார் , அம்ரிஜீத் கவுர்  AITUC,தபன்சென்  CITU ,மிஸ்ரா ,ரெயில்வே , ஆத்மி பாராளுமன்றன் உறுப்பினர்  பொதுசெயளர்கள்  என பலரு ம்  உரையாற்றினர்கள் .
நாடு  முழுவதிலும்  இருந்து  வந்த  அனைவருக்கும்  தங்க  இடம்,உணவு  என
   சிறப்பான  ஏற்பாடுகளை  மத்திய  சங்கம் செய்து இருந்தது,
ஒரு புதிய  அனுபவம் , உத்வேகம்  வேலை நிறுத்தம்  செய்திட  உதவும்.
பின்னர்  தலைவர்கள்  ஒரு கோடி  கைய ழுத்து  படிவங்க்களை PMO ஒப்படைத்தனர்  

திங்கள், பிப்ரவரி 23, 2015

மத்திய செயற்குழு

 மத்திய செயற்குழு 
 மத்திய செயற்குழுக் கூட்டம்  ஏப்ரல் 9 முதல்  10 வரை ஜெயப் பூரில்  நடைபெறும் 

ஞாயிறு, பிப்ரவரி 22, 2015

Strike Poster


வாழ்த்துவோம்

வாழ்த்துவோம்
இன்று   60 வது பிறந்தநாள்  28/02/2015 அன்று பணி ஓய்வு  பெரும்  நமது  தோழர்  சம்மேளன செயலர்  கோபால கிருஷ் ண ன்  அவர்களை  வாழ்த்துவோம்