வியாழன், மே 30, 2013

வேலூர் மாவட்டசங்க போராட்டம்

பேர்ணாம்பட்டு  பகுதியில்  நமது  ஊழியர்களுக்கு  மிகவும்  தொல்லை  கொடுத்துவந்த  பிரச்னைக்குரிய  அதிகாரி  மாற்றல்  செய்யப்பட்டதையடுத்து  மாவட்டச்செயலரின்  உண்ணாவிரதம்  வெற்றிகரமாக  முடித்துக்கொள்ளப்பட்டது.  பொதுமேலாளர்  உத்தரவிட்டபிறகும்,  நிதமும்  இரவு  10  மணிவரை  பணீயாற்ற   அந்த அதிகாரியால் நிர்பந்திக்கப்பட்ட பெண் ஊழியருக்கும் 0900 - 1700 பணி வழங்கி உத்தரவிடப்பட்டது.  பிரச்னையில்  தலையிட்டு  சுமுக  தீர்வுக்கு  உதவிட்ட  மாநிலச்செயலருக்கு  நன்றி  !

முதன்  முதலாக  மாவட்டசெயலர் அல்லிராஜா  நீண்டகாலத்திற்கு  பிறகு காலவரையற்ற  உ ண்ணா  விரத போராட்டம் இருந்து ,பிரச்சனை  தீர்வு  காண ப்பட்டது ,மாநில சங்கத்திற்கும்  நன்றி 

வேலூர்  மாவட்டசங்க போராட்டம்  வெற்றியுடன்

  முடிவடைந்துள்ளது SDE  மாற்றப்பட்டார் .

ஊழி ய ர்   general duty க்கு  கொண்டு வரப்பட்டார் 

.வேலூர்  மாவட்டசங்க த்திற்கு  வாழ்த்துக்கள் 




இல்ல தொலைபேசி யில்

இல்ல தொலைபேசி யில்  வேறு கம்பெனி 

இணைப்புகளை தடை செய்து உத்திரவு  

ஜனவரியில் பிறப்பிக்கப்பட்டது.அலுவலக 

தொலைபேசி யில்வேறு கம்பெனி 

இணைப்புகளை பேசிட தடை செய்யப்பட்டது. 

மாநில செயலர் இது குறித்து கடும்

  ஆட்சேபனையை  நிர்வாகத்திடம்  தெரிவித்து 

இல்ல தொலைபேசி யில்  வேறு கம்பெனி 

இணைப்புகளை பேசிட  ஏற்பாடு செய்தது,


மீண்டும்  இதே பிரச்னை  எழும்பியுள்ளது . 

இது குறித்து மாநில செயலர்நிர்வாகத்திடம் 

 தெரிவித்து இல்ல தொலைபேசி யில்  வேறு 

கம்பெனி இணைப்புகளை பேசிட  ஏற்பாடு செய்ய

 உறுதி அளித்துள்ளது.மாநில சங்கம் இந்த  

பிரச்னைய்யை  விரைந்து  தீர்க்க உறுதி 

அளித்துள்ளது

strike tour programme-ssa

அனைத்து சங்க போராட்டதயாரிப்பு கூட்ட முடிவுகள்
அனைத்து ஊழியர்களும் விடுப்புஎடுத்து தார்ணா போராட்ட்த்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும்.முழுநேரமும் பந்தலில் இருக்கவேண்டும்.மகளிரும் கலந்துகொள்ளவேண்டும்.
சுற்றுபயணவிபரம்
31/05/2013-முத்தியால்பேட்
ஹரிஹரன்,அசோகராஜன்,தங்கமணி
ரெயின்போ நகர்
காமராஜ்,நந்தன்,திருமெனி,ஆறுமுகம்,வேலு
மூலகுளம்-சிவில்
தண்டபாணி,ராமகிருஷ்ணன்,மனோகரன்
மேட்டுபாளையம்
தேவதாஸ்,ராஜாமணீ,செல்வரங்கம்,நந்தகோபால்
லாஸ்பேட்டை
மஹேஸ்வரன்,கிருஷ்ணன்,ராதாகிருஷ்ணன்,
01/06/2013
டவுன் -வில்
தங்கமணி. நந்தன் திருமெனி,ஜான்,
இளங்கோ நகர்
அசோகராஜன் ,வேலு நந்தகோபால்,பாஸ்கர்
நடேசன் நகர்
தண்டபாணி,மனோகரன்,தனுசு
உழந்தை
ஆறுமுகம் செல்வரங்கம்,சண்முகசுந்தரம்
குருப்ஸ் பகுதி
03/06/2013அரியாங்குப்பம்,
தவளகுப்பம்,பாஹூர்,
கிருமாம்பாக்கம்
பெரியண்ணசாமி,புஸ்பராஜ்,செல்வரங்கம்,  நந்தகோபால்
காலாபட்டு,ஆரொவில்,
ரவனையா, வேலு, தனுசு
திருச்சிற்றம்பலம், திருக்கனுர்
காட்டெரிகுப்பம்,
பழனி,அன்புசெல்வன்,தர்மலிஙகம்
வில்லியனுர்,கண்டமங்களம்,
திருபுவனை,கரையமாணிக்கம்
செல்வன்,நாகலிஙம்,கோவிந்தசாமி,காத்தமுத்து
04/06/2013-பொது மேலாளர் அலுவலகம்-தொலைபேசி நிலையம்
போராட்ட்த்தை வெற்றிகரமாக்குவோம்.

தோழமையுடன்----ப.காமராஜ், மாவட்டசெயலர்.NFTE-PUDUCHERRY-SSA

ஞாயிறு, மே 12, 2013

மடலுக்கு மடல்

மாநில செயலரிடம்,மாநிலசெயற்குழு  கூட்டத்தில் கூற  வேண்டியதை

யெல்லாம்  திறந்த  மடல்  எழுதி  காலம் தள்ள   வேண்டியநிலை .

STR/STP  பகுதி \ ஊழியர்கள்  கூற  வேண்டியதை  மாநில  பொருளர்  கூறுவது

அந்த பகுதி \ ஊழியர்கள்  சுயநிர்ணய  உரிமையை  பறிப்பது  ஆகும் . மதுரை

மாநாடு க்கு  முன்னரெ பலமுறை பேசி வந்த  மாவட்ட அமைப்பு அங்கிகாரம்

பெற்ற  இந்த சூல் நிலையில்  தேவை அடிப்படையில்

 உருவாக்கப்பட்டுள்ள்ளது.

இந்த  மாவட்டம் உருவானதில்  இவருக்கு /அல்லது யாருக்கு  பிரச்னை  என்ன

பிரச்னை  என விளக்குவார?

சட்ட சிக்கல்லா ? சந்நிதான சிக்கலல்லா ?

மடலுக்கு  மடல்

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

TTA தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு  வாழ்த்துக்கள் 

தோழர் .A.D.சுப்ரமணியன் ,
தோழர் .S.விஜயராகவன் ,
தோழர்.S.பசுபதி 

புதன், மே 08, 2013

cuddallore settlement


கடலூர்  மாவட்ட  மாநாடுக்கு பின்னர்  தோழர் ஸ்ரீதர்  மீது  நடத்திய  தாக்குதல்,காவல்துறை  புகார்,நிர்வாக  புகார்,
என  தாக்குதல்  அனைத்தும்  முறியடிக்கப்பட்டு நிர்வாகத்தின் சுமுக அணுகுமுறை ,மாநில சங்கம்  முயற்சியால் பிரச்னை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  தோழர் ஸ்ரீதர் ,மாவ்ட்டசெயலர்  அவர்களுக்கு  நமது வாழ்த்துக்கள் 

கடலூர்  மாவட்ட சங்க  தீர்மானம் 

தீர்மானம் 1:

     திருப்பாப்புலியூர் தொலைபேசி நிலையத்தில் நிகழ்ந்த பிரச்சனையை ஒட்டி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்த மாவட்ட அவசர செயற்குழு ஆழ்ந்த கவலையுடன் பரிசீலித்தது.

   மாநில, மாவட்ட சங்கங்களின் உணர்வினைப் புரிந்து கொண்டு விரைவான தீர்விற்கு மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள உறுதி மொழி, நிர்வாகம் சங்கத்திற்கிடையே இருக்க வேண்டிய நல் உறவிற்கு காட்டியுள்ள ஆக்கபூர்வமான சமிக்ஞை என்பதாக மாவட்ட செயற்குழு கருதுகிறது.

   எனவே மாவட்ட நிர்வாகத்தின் உறுதி மொழியினை ஏற்று வரவேற்கிறது. உறுதி மொழியை விரைவில் செயல்படுத்த வேண்டுகிறது

தீர்மானம் 2:

       நமது மாநில சங்கம், மாவட்ட சங்கங்களின் வேண்டுகோளினை ஏற்று கிளைச் செயலாளர் தோழர் E. விநாயகமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி இடை நீக்கத்தை அவரது வேண்டுகோள் கடிததத்தைப் பெற்று உத்தரவை இரத்து செய்யவும்;

     கிளைத்தலைவர் தோழர். V. இளங்கோவன் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி இடை நீக்கத்தை அவரது வேண்டுகோள் கடிததத்தைப் பெற்று உத்தரவை இரத்து செய்யவும்;

     மாவட்ட செயலருக்கு வழங்கப்பட இருந்த பணி இடை நீக்கத்தை கைவிடவும் மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

     மாவட்ட நிர்வாகத்திற்கும், குறிப்பாக நமது மாவட்ட முதுநிலைப் பொதுமேலாளருக்கும் இம்மாவட்டச் செயற்குழு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது.


தீர்மானம் 3:

     கடலூர் மாவட்ட பணி இடை நீக்கப் பிரச்சனையில் உரிய நேரத்தில் தலையிட்டு தீர்விற்கு வழிகோலிய மாநில சங்கதிற்கு நன்றியை உரித்தாக்குகிறது.