செவ்வாய், அக்டோபர் 13, 2015

மாவட்ட செயற்குழு கூட்டம் 12/10/2015

NFTE-BSNL, PUDUHERRY
சுற்றறிக்கை:- எண்1/-தேதி 13/10/2015
மாவட்ட செயற்குழு கூட்டம் 12/10/2015 ல் மாவட்டத்தலைவர் தோழர் தண்டபாணி தலைமையில் நடை பெற்றது. கீழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
·         19/10/2015 திண்டிவனம் கிளைசெயலர் கருத்தரங்கில் பெருவாரியாக கல்ந்தகொள்ள வேண்டும்..
·         சேவை குறித்த கூட்டம் நிர்வாகம்,சங்கங்கள் கலந்து கொள்வது
·         போனஸ் தார்ணா போராட்டம் வெற்றிகரமாக்குவது,
·         வைப்பு நிதி பயன்பாடு குறித்து கமிட்டி அமைக்கப்பட்ட்து.
·         மாவட்ட சங்க செயல்பாடு சிறக்க  சிறப்பு அழைப்பாளர் பதவிகள் உருவாக்கிட ஏற்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்துடன் விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள்
1)    4 வருடம் முடித்த சேல்ஸ் பகுதி ஊழியர்களின் விருப்ப அடிப்படையில் மாற்றல்.
2)    டெலிகாம் மெக்கானிக் பணியாற்றும் இடங்கள் தேவை குறித்து முழுமையாக பரிசீலிக்கவேண்டும்.
3)    கிராமபுறத்தில் பில் கட்டும் வசதி.
4)   DE  அலுவலகத்திற்க்கு எழுத்தர் வசதி.
5)    சீருடை ஜன-2015 ல் ஏற்க்கப்பட்டும் காலதாமதம்.
6)   அனைத்து ஊழியர்களுக்கும் மாநில கூட்டுஆலோசனைக்குழு முடிவுப்படி பேக் வழங்குதல்.
7)    வில்லியனுர்/கண்டமங்கல்ம் பகுதிகளுக்கு TM/TTA நியமனம்.
8)    தோழர் மணி  TM விருப்ப மாற்றல் மற்றும் TM விருப்ப மாற்றல்கள்.
9)   சங்க அலுவலக கணிப்பொறி வழங்குதல்.
10)  விடுமுறை பணிக்கு மிகுதிநேர படி காலதாமதம்- பட்டுவாடா.
தோழமை , வாழ்த்துக்களுடன்,

மா.செல்வரங்கம்,மாவட்டசெயலர்.

சனி, அக்டோபர் 10, 2015

மாவட்ட செயற்குழு

NFTE-PUDUCHERRY SSA

மாவட்ட செயற்குழு
12/10/2015 மாலை 0500 மணி சங்க அலுவலகம்
தலைமை:-  தோழர் . M. தண்டபாணி, மாவட்டத்தலைவர்,
வரவேற்புரை: தோழர் . M. செல்வரஙகம், மாவட்டசெயலர்
துவக்க உரை :- தோழர் . P.காமராஜ், அ. இ. சிறப்பு அழைப்பாளர்,
ஆய்படு பொருள்

வாழ்த்துரை:- தோழர் .K.அசோகராஜன், மாநில பொருளர்,

v  அக்-19-திண்டிவனம், -இணைந்த மாவட்ட செயற்குழு ,
v  கிளை செயலர் கருத்தரங்கம்.
v  நிரந்தர வைப்பு –சம்பந்தமாக
v  சேவை மேம்பாடு
v  உறுப்பினர் சரிபார்ப்பு-உறுப்பினர் சேர்ப்பு
v  இதர தலைவர் அனுமதியுடன்,
தோழமை வாழ்த்துகளுடன்
M. செல்வரஙகம், மாவட்டசெயலர்

அனைவரும் வருக!

வியாழன், அக்டோபர் 08, 2015

செய்திகள்

செய்திகள் 

தமிழகத்தில் 02/06/2013 அன்று நடந்த JTO இலாக்காத் தேர்வில் ST காலியிடங்களில்  7 தோழர்கள் வெற்றி பெற்றதாக  தமிழக நிர்வாகம் அறிவித்துள்ளது. வெற்றி பெற்ற தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

09/10/2015 முதல்  GPF நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

பதவி பெயர் மாற்றத்தில் அதன் குழுவின் பரிந்துரை  அமுல்படுத்தப்பட வேண்டும் என நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
திறந்த நிலைப்பல்கலைக் கழகங்கள் மூலம் பெறப்பட்ட +2 படிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.


JTO ஆளெடுப்பு விதிகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு விரைவில் உத்திரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் சாதிச்சான்றிதழ் பிரச்சினையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தோழர்.அந்தோணிச்சாமி, SS அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த மத்திய சங்கமும் தமிழ் மாநில சங்கமும்  முயன்று வருகின்றன.

ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பை அமுல்படுத்துவது சம்பந்தாகவும், தனி  TOWER CORPORATION அமைப்பது சம்பந்தமான பிரச்சினையில் அரசால் அமைக்கப்படும் அமைச்சர்கள் குழுவில் BSNL சார்பாக அதிகாரிகளை சேர்த்திடக் கோரியும்   DOT செயலரை நமது கூட்டமைப்புத்தலைவர்கள் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

TM பதவிகளில் ST  பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நமது சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அடி மட்ட ஊழியர்களின் STAGNATION - ஆண்டு உயர்வுத்தொகை தேக்க நிலை  பற்றி விரைந்து முடிவெடுக்க நமது சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

BUSINESS AREA CONSOLIDATION

 நமது மாவட்ட நிர்வாக அமைப்பு  SSA விலிருந்து  Business area  ஆக மா றும் பொழுது  ஏற்படும்  மாறுதல்கள்  ,பிரச்சனைகளை  குறித்து  இந்த உத்திரவு  குறித்தும்  முழுமையாக  பரிசீலிக்கவேண்டும் 


ஞாயிறு, அக்டோபர் 04, 2015

BONUS DEMO 06-09-2015

NFTE-PUDUCHERRY–SSA
அக் -6-2015
அட்ஹாக் போனஸ் கோரி ஆர்ப்பாட்டம்
இடம்:-பொதுமேலாளர் அலுவலகம்      மாலை 0500 மணி

·      போனசை லாபத்துடன் இணைக்காதே !
·      PRP/PMS நிபந்தனைகளைபுகுத்தாதே !
·      குறைந்த பட்ச போனஸ் மறுக்காதே !
·      60 % க்கு கீழ் போனஸ் மறுக்காதே!
·      FAIR என்பதை உருவாக்கு !
·      ஒப்பந்தம் உருவாக்கும் வரை
அனைவருக்கும் போனஸ் வழங்கு !

என கோரி போரம் சார்பாகஆர்ப்பாட்டம்நடைபெறும். அனைவரும் கலந்துகொண்டு வெற்றிகரமாக்குவோம்.
M.செல்வரங்கம் , மாவட்டசெயலர்.



WFTU 70-OCT-3/2015

அக்டோபர்  3 -70 ஆண்டுகளை    நிறைவு செய்கிறது.அதன் நிறைவு விழா  பல நாடுகளில் நடை பெற்றுள்ளது .