செவ்வாய், ஜனவரி 06, 2015

dharnaa 06012015

தர்ணா  முதல்  நாள்  படம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க வலியுறுத்தி புதுச்சேரியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.


கிராமப்புற சேவையை வழங்குவதால் பிஎஸ்என்எல்லுக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசு ஈடுகட்ட வேண்டும். சேவையை விரைவுபடுத்தவும், மேம்படுத்தவும் புதிய கருவிகளை வாங்க வேண்டும். நிறுவன நலனுக்கு எதிரான கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்கக்கூடாது. 4 ஜி சேவையை உடனடியாக தொடங்க அனுமதி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பிஎஸ்என்எல் சேவையை கட்டாயமாக்க வேண்டும். இலவச அலைக்கற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இன்று தொடங்கிய போராட்டம் 3 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது.

பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் செவ்வாய்கிழமை  (ஜன-6)துவங்கி நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு புதுவை பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு  தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். அமைப்பாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், செல்வ ரங்கம் ,மணிகண்ணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.








ஞாயிறு, ஜனவரி 04, 2015

வாழ்த்துகிறோம்

 வாழ்த்துகிறோம் 
07/01/2015  அகவை  95
நீடுழி வாழ  வாழ்த்துகிறோம்.


guptha 06/01/2015

 தோற்றம் 06/04/1922- மறைவு  06/01/2013

06/01/2015  தோழர்  குப்தா  
இராண்டாம் ஆண்டு நினைவு  நாள் 

தொலைதொடர்பு ஊழியர்கள் கூட்டுறவு சங்கபேரவை கூட்டம்

NFTE-BSNL-PUDUCHERRY.
தொலைதொடர்பு ஊழியர்கள் கூட்டுறவு சங்கபேரவை கூட்டம்
தொலைதொடர்பு ஊழியர்கள் கூட்டுறவு சங்கபேரவை கூட்டம் 03/01/2015 அன்று நடைபெற்றது. கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
சாதாரணகடன் ரூ 6 லட்சமாக உயர்த்தப்பட்டது குடும்பநல நிதி(இன்சுரன்ஸ்) ரூ4 லட்சத்திலிருந்து ரூ 6 லட்சமாக உயர்த்தப்பட்ட்து. குடும்பநல நிதி ரூ800லிருந்து ரூ1200 ஆக உயரும். சாதாரணகடன் 01/04/2015 முதல் மாதம்தோறும் வழங்கப்படும்.
Thrift fund ரூ 500 லிருந்து ரூ800 ஆக உயரும்.அதற்கான வட்டி 8% லிருந்து 9 % மாக உயரும்.
கணினி கடன் 05/01/2015 முதல் ரூ30,000 ஆயிரமாக உயரும்.

RD விருப்பஅடிப்படையில் ரூ500/= முதல் ஏற்க்கப்படும்.

வியாழன், ஜனவரி 01, 2015

மனித வள திட்டம் பரிந்துரைகள்

மனித வள திட்டம் பரிந்துரைகள்
மத்திய சங்கத்திற்க்கு தோழர் பட்டாபி முன்வைத்தகருத்துகள். மேலும் மாவட்டத்தோழர்கள் தங்கள் கருத்து ஏதுமிருந்தால் மத்திய சங்கத்திற்க்கு தெரிவிக்கலாம்..
அகில இந்திய அளவில் மனித வள திட்டம் பரிந்துரைகள் உள்ளன.மாநில, மாவட்ட அளவில் திட்டபரிந்துரைகள் வேண்டும்.பின்னர்தான் நாம் முழுமையாக பரிசீலித்து ஊழியர்களை மாற்றுபணிக்கு திட்டமிடமுடியும். திட்ட,சாதக,பாதகங்களை அறியமுடியும்.
 நிறுவனத்தின் இன்றைய உற்பத்தி, சந்தை தேவைக்காக மாற்றம் செய்வதை யாரும் மறுக்க முடியாது.
வாடிக்கையாளர் சேவைமையம், சேல்ஸ்,மார்க்கட்டிங், பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சரிசெய்திடவேண்டும்.
கூடுதல்/பற்றாக்குறை என ஊழியர்களை இடமாற்றம் நிர்வாக உரிமை - யாகிவிடக்கூடாது. ஊழியர்,நிர்வாகம் இணைந்து முடிவு செய்திட வேண்டும்.
மாற்றலுக்கு ஈடு அல்லது ஒரு வருட மாற்றல் இருக்கவேண்டும்.
சீரமைப்பு என்றாலே ஊழியர் குறைப்பு மட்டுமே.எனவே பணிபாதுகாப்பு உரிமை தொடரவேண்டும். JTO ஆளெடுப்பு விதிகளைகூட மாற்ற மறுக்கும்  நிலை ,அரசு இயக்குனர்களின் பிடிவாத தன்மையை வெளிப்படுத்துகிறது.
கூடுதல் ஊழியர்களை நியமிக்க ஊழியர்தரப்புகோரிவருகிறது.விருப்ப ஓய்வுதிட்டம் ஏற்கமுடியாது. விருப்ப ஓய்வுதிட்டம் பங்குவிற்பனைக்கு முன்னோடியாக இருக்கும்.2000 போராட்ட ஒப்பந்தம் அதன் அம்சங்கள் மீண்டும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.
டிலாய்ட்டி பரிந்துரைகளை ஊழியர்தரப்பு எதிர்க்கிறது.ஏரியா திட்டம் நமது சேவை,வாடிக்கையாளர்  திருப்தி, ஆகியவற்றுக்கு துணையாக இருக்காது. மாவட்ட அமைப்பு வாடிக்கையாளர்,ஊழியர்கள், என அனைவரயும் பிணைப்புடன் வைத்துள்ளது. பூகோள ரீதியில் சேவைக்கு அருகே
அமையபெற்றுள்ளது.
தலை கனத்து,கால் சிறுத்துஎன்பது போல அதிகாரிகள், ஊழியர்கள் எண்ணிக்கை1,98,223 லிருந்து 94,138 ஆக குறைக்கும்திட்டம். BCG  திட்டம்1,86,500 என்பதைவிட மிக மிக குறைவு.
TTA கேடர்களை சரியானை இடத்தில் பொருத்தவில்லை.19691 TTA க்களை BCG24,000 ஆக உயர்த்திட பரிந்துரைத்தது.30,000 ஆக உயர்த்துவது சரியானது.11,000 ஊழியர்கள் வெளியிலிருந்தும், போட்டிதேர்வு விதிதளர்வு மூலம் TM களை உயர்த்திட வேண்டும்.
Sr.TOA-ERP - அமுலாக்கத்திற்க்கு பிறகு 9000 பேர் மட்டுமேதேவை.30,000 பேர் பயிற்சி மூலம் ,6 மாத்த்திற்க்கு ஒருமுறை பணிஓய்வு உட்பட காலியான பதவிகளில்.நிரப்பப்படவேண்டும். Sr.TOA என்றால் Sr.TOA (G) மட்டுமா அல்லது அனைத்து Sr.TOA உண்டா என்பதை விளக்கம்வேண்டும்.
TM/RM 88000 TM /30000 RM என 1,18,000 ஊழியர்களை பரிந்துரைத்தது.
இன்று மொத்தம் 117025 ஊழியர்கள் ஊள்ளனர்.ஆனால் இவர்கள் 72000 TM ஆக குறைப்பது 45000 ஊழியர்களை உபரியாகிவிடும்
30000,மற்ற கேடர்கள் 1500 மட்டுமே பரிந்துரைக்கப்படுள்ளது.அவைஎதுஎன கேடர் வாரியாக விளக்கம்வேண்டும்.
சில விளக்கஙகள் கோரி...
75000 ஊழியர்கள் உபரி என்றால் பின் விளைவுகள் என்ன? உபரியாக வைத்திருக்கவேண்டிய அவசியம், ஊதிய செலவினம் குறித்த திட்டம் என்ன?
அரசிமிருந்து ஊழியர்கள் உபரிக்கு நிதிஉதவி பெறப்படுமா?
இதுவரை உருவக்கப்பட்ட பதவிகள் கேடர் வாரியாக எவ்வளவு? எவ்வாறு பராமரிக்கப்படுகிறது.
ஊழியர்கள் உபரியானல் வெறுமாற்றுபணி உண்டா?
JTO/SDE இணைப்பில் JTO நிலை உயர்த்தபடுமா?
பங்குவிற்பனை திட்டம் ஏதுஉண்டா? அதற்க்காக ஊழியர் எண்ணிக்கை குறைத்து காட்ட படுமா?




புதன், டிசம்பர் 31, 2014

செய்தி... துளிகள்...

செய்தி... துளிகள்...


01-01-2015 முதல் IDA 2.2% சதம் உயர்ந்துள்ளது.
இத்துடன் மொத்த IDA 100.3% சதம் ஆகும்.
IDA இணைப்பிற்கான குரல்
ஓங்கி ஒலிக்க வேண்டிய நேரமிது.
============================================================
    NFTE - BSNL உறுப்பினர் சந்தா 
மாதம் ரூ. 25/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி 2015-ல் இருந்து அமுலுக்கு வரும்.

மத்திய சங்கம் ரூ. 6/-
மாநில சங்கம் ரூ 9/-
மாவட்ட சங்கம் ரூ 6/-
கிளை சங்கம் ரூ 4/-
============================================================
ஜனவரி மாத GPF மற்றும் விழாக்கால முன்பணம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 03-01-2015 க்குள் அந்தந்த மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும்.

மாநில நிர்வாகம் 05-01-2015 க்குள் விண்ணப்ப விபரங்களை அனுப்பிட மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

 இரண்டு மாத GPFம்  சேர்த்து பட்டுவாடா செய்யப்படும் என்பது கணக்கதிகாரிகளின் பதிலாகின்றது.
============================================================
தள்ளி வைக்கப்பட்ட தமிழ் மாநில செயற்குழு
10-02-2015 அன்று சென்னையில் நடைபெறும் என்று
மாநிலச் சங்கம் அறிவித்துள்ளது.  

TTA தேர்வு  மதிப்பெண்  தளர்வு செய்திட புதிய வழிகாட்டுதலை  நிர்வாகம்  வெளியட்டுள்ளது .       

சிறப்புபொதுக்குழுகூட்டம்

  NFTE-BSNL PUDUCHERRY-SSA

சிறப்புபொதுக்குழுகூட்டம்

05/01/2015- சங்க அலுவலகம்-மாலை 0400 மணி
தலைமை :- தோழர்.A.மகேஸ்வரன், மாவட்டத்தலைவர்
வரவேற்புரை:- M.செல்வரங்கம், மாவட்ட பொறுப்புசெயலர்,

ஆய்படுபொருள்

v   கேபிள் பணி  - நிர்வாக நிலை
v  ஊழியர்கள் பிரச்சனைகள்
v  அகில இந்திய வேலைநிறுத்தம்-
v  ஜனவரி-6,7,8 தார்ணா.
கருத்துரை
  தோழர்.K. அசோகராஜன்,மாநில பொருளர்
  தோழர். P.காமராஜ், அ இ சங்க சிறப்பு அழைப்பாளர்.

நன்றியுரை

அனைவரும் வருக.!


M. செல்வரங்கம், மாவட்ட பொறுப்புசெயலர்,