வெள்ளி, ஆகஸ்ட் 01, 2014

வாழ்த்து கிறோம்

மத்திய  அரசின் கூட்டு றவு  துறை நமது டெலிகாம் கூட்டு றவு

 சங்கத்தை  சிறந்த  நிர்வாகத்திற்கும்  இந்திய  நேபாள்  நட்புறவு

அவார்ட் வழங்கிட  தேர்ந்தடுத்து ள்ளது .ஆகஸ்ட்2 ம் தேதிஅவார்ட்

வழங்கப்படள்ளது சங்கத்தலைவர்  தோழர் வீரராகவன்  அதை பெற உள்ளார்

.அவரை \வாழ்த்து கிறோம் மேலும் அவார்ட் வழங்கிட உருதுனையாக இருந்த

இயக்குனர்கள் ,உறுப்பினர்கள் ,ஊழியர்கள்  அனைவரையும்  பாராட்டுகிறோம் .

வெள்ளி, ஜூலை 25, 2014

புதிய போனஸ் வரையறை

புதிய போனஸ் வரையறை


புதிய போனஸ் கணக்கீட்டை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட போனஸ் குழுக்கூட்டம் 23/07/2014 அன்று நடைபெற்றது. 

இலாபத்துடன் இணைந்த போனஸ் என்பது இல்லாமல் உற்பத்தியுடன் இணைந்த போனஸ் என்ற நமது கோரிக்கையின் அடிப்படையில் நிர்வாகம் தனது குறிப்பை KPI  அளித்துள்ளது.


  • புதிய தரைவழி தொலைபேசி இணைப்புக்களை கொடுப்பது..
  • தரைவழி இணைப்புக்களை தக்கவைப்பது..
  • புதிய அகன்ற அலைவரிசை BB   இணைப்புக்களை கொடுப்பது..
  • அகன்ற அலைவரிசை BB   இணைப்புக்களை தக்கவைப்பது..
  • WIMAX மற்றும் CDMA இணைப்புக்களை கொடுப்பது 
என்ற மேற்கண்ட பணிகளுக்காக 
55 மதிப்பெண்கள் நிர்ணயிக்கபட்டுள்ளது.

  • தரைவழி,அகன்ற அலைவரிசை இணைப்புக்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுப்பது..
  • தரைவழி,அகன்ற அலைவரிசை பழுதுகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் அகற்றுவது..
போன்ற பணிகளுக்காக 35 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CM எனப்படும் CONSUMER MOBILITY 
கம்பியில்லா தொலைபேசி பகுதிக்கு 10 மதிப்பெண்களே வழங்கப்பட்டுள்ளது.
விற்பனைப்பிரிவு, புதிய சேவைப்பிரிவு, வணிகப்பிரிவு 
போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

மொத்தத்தில்...

  • பழுதுகளை உடனே அகற்றுதல்...
  • இணைப்புக்களை உடனே கொடுத்தல்..

என்ற பணிகளை மட்டும் நாம் செவ்வனே செய்தால்

 போனஸ் கிட்டும்.. என்பது 

நிர்வாகத்தின் தற்போதைய நிலைபாடு...


நமது நிலைபாடு என்ன?
குரல் எழுப்பி போனஸ் பெறப்போகின்றோமா?..
உடல் உழைத்து போனஸ் பெறப்போகின்றோமா?..
என்பதுதான் தற்போதைய கேள்வி..

JCM தேசியக்குழு கூட்டம்

JCM தேசியக்குழு கூட்டம் 
எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகள் 
  • 78.2 சத IDA இணைப்புக்கேற்ப ஊழியர்களின் சம்பள விகிதங்களை மாற்றுதல்.
  • ERP நடைமுறைப்படுத்துதலில் உள்ள சிக்கல்களை தீர்த்தல்
  • BSNL CDA நன்னடத்தை விதிகளில் திருத்தம்.
  • GPF நிதி ஒதுக்கீட்டை முறைப்படுத்துதல்.
  • MRS மருத்துவத்திட்டத்தில் சகோதர சகோதரிகளை சேர்த்தல்.
  • BSNL  மாற்றல் கொள்கையில் திருத்தம்.
  • மருத்துவப்படியை ஓய்வு பெற்ற தோழர்களுக்கு வழங்குதல்.
  • தொழிற்சங்க பொறுப்பாளர்களுக்கான மாற்றல் சலுகையில் திருத்தம்.
  • ஆயுள் காப்பீட்டுத்தொகையை உயர்த்துதல்.
  • ஓய்வுக்கு ஓராண்டு முன்பாக ஆண்டு உயர்வுத்தொகை தரும் திட்டத்தை உயிர்ப்பித்தல்.
  • கூட்டு ஆலோசனைக்குழுக்களுக்கான விதிமுறைகளை வகுத்தல்.
  • TELECOM FACTORY தயாரிப்புகளுக்கு தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ்களை தாமதமின்றி தருதல்.
  • இரண்டாவது கேடர் சீரமைப்பு அமுல்படுத்துதல்.
  • மக்கள் தொகைக்கு ஏற்ப வீட்டுவாடகைப்படியை உயர்த்துதல்.
  • தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கு கேடர் சீரமைப்பு.
  • பல்முனை திறமை கொண்ட ஊழியர்களை உருவாக்குதல்.
  • விடுப்பைக்காசாக்கும் திட்டத்தில் ஆயுள் காப்பீடு உருவாக்குதல்.
  • தேசியமொழி அதிகாரி பணியிடங்களை முறைப்படுத்துதல்.
  • எதிர்மறை மதிப்பெண் திட்டத்தைக் கைவிடுதல்.

புதன், ஜூலை 23, 2014

செய்திகள்

செய்திகள் 

GPF இம்மாத இறுதியில்தான் பட்டுவாடா செய்யப்படும் என மத்திய சங்கம் கூறியுள்ளது.  இனிமேல் ஒவ்வொரு  மாதமும் சம்பளத்துடனே GPF என்பது உறுதி செய்யப்பட்டாலே போதுமானது. ஒவ்வொரு நாளும் தேதி கிழித்து விரல் தேய அவசியம்  இருக்காது.
============================================================
BSNLலில் நேரடியாக நியமனம் செய்யப்பட தோழர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளிக்க வேண்டும் என்ற உடன்பாட்டிற்கு இரண்டு வயது ஆகிவிட்டது. இன்னும் நிர்வாகம் உத்திரவிடவில்லை. உரிய காலத்தே உத்திரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது. ஊழியர்களுக்கு 60 வயது ஆகுமுன் 
உடன்பாட்டிற்கு 60 வயது ஆகாமல் இருந்தால் சரி...
===============================================================
30/09/2000க்கு முன் TSM ஆகப்பணி புரிந்து நிரந்தரம் ஆன தோழர்களின் 
TSM சேவைக்காலத்தில் பாதியளவு ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இதற்கான குறிப்பு சேவைக்குறிப்பேட்டிலும் HRMS PACKAGE லும் இடம் பெற வேண்டும். ஆனால் பெரும்பான்மையான இடங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது. 


===============================================================
தேங்கிக்கிடக்கும் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 07/08/2014 அன்று 
நாடு தழுவிய கோரிக்கை நாள் 
கடைப்பிடிக்க அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு 
 JAC  அறைகூவல் விடுத்துள்ளது.
===============================================================
BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் ஏறத்தாழ 28000க்கும் அதிகமான கூடுதல் செல் கோபுரங்களை இந்த ஆண்டு  நிர்மாணிக்கும் என 
இலாக்கா அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

திங்கள், ஜூலை 21, 2014

தோழர்.ஆறுமுகம்,TM பணிஓய்வு








தோழர்.ஆறுமுகம்,TM பணிஓய்வு
தோழர். ஆறுமுகம், 74-ல் மஸ்தூராக கோயாக்சியல் பகுதியில் பணி துவக்கி லைன்மேன்,கேபிள் ஜாயிண்டர்,போன்மெக்கானிக், ஆக பதவி உயர்வு பெற்று 31/07/2014-ல் பணிஓய்வு பெற உள்ளார் .NFTE சங்க முக்கிய தோழர் ஆவார். கிளை, மாவட்ட பொறுப்புக்களை ஏற்று செயல்பட்டவர். அனைரிடமும் அன்பாக பழகும் தன்மை, எளிமை என திகழ்ந்தவர்.FNTO மாவட்ட செயலர்,தலைவர் என பணி புரிந்து 1990 களில் NFTE சங்கத்தில் இணைந்தார். NFTE சங்கத்தில் மாவட்ட தலைவர் பதவியில் பணிபரிந்து சிறப்பு சேர்த்தார்...மாநில  சங்கத்திற்க்கு ரூ500/ நன்கொடை வழங்கியுள்ளார். அவரது பணி ஓய்வு சிறக்க வாழ்த்துகிறோம்.