செவ்வாய், ஜனவரி 28, 2014

news

SC/ST  தோழர்களின் நலனுக்கான 
 பாராளுமன்றக்குழு 

SC/ST தோழர்களின் நலனுக்கான பாராளுமன்றக்குழு  அவர்களது நீண்ட நாள் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு குறிப்பு அனுப்பியுள்ளது. 32 பிரச்சினைகள் அதில் இடம் பெற்றுள்ளன . அதில் இரண்டு மிக முக்கிய பிரச்சினைகள் பற்றி நமது சங்கக்கருத்தினை பாரளுமன்றக்குழுவிற்கு தெரிவித்திடக்கோரி  நமது மாநிலச்செயலர் மத்திய சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மாநிலச்செயலர் எழுப்பியுள்ள கோரிக்கைகள் 
NEPP பதவி உயர்வில் சலுகை 

SC/ST ஊழியர்களுக்கு நாலு கட்டப்பதவி உயர்வில் சலுகைகள் அளிக்க வேண்டும் என்பது நமது நீண்ட நாள் கோரிக்கை. உச்சநீதி மன்றம் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அளித்த பல்வேறு தீர்ப்புகளை காரணம் காட்டி BSNLலில்  நாலு கட்டப்பதவி உயர்வில் SC/ST தோழர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முடியாது என நிர்வாகம் தொடர்ந்து கூறி வருகின்றது.
இது ஏற்புடையதல்ல. இட ஒதுக்கீடு அளிக்க இயலாவிட்டாலும் நாலுகட்டப்பதவி உயர்வில் அவர்களுக்கு சலுகைகள் அளிக்கலாம். DOTயில் இருந்து BSNLக்கு வந்த ஊழியர்களுக்கு முதல் கட்டப்பதவி உயர்வு 4 ஆண்டுகளிலும்,  இரண்டாம் கட்டப்பதவி உயர்வு 7 ஆண்டுகளிலும் சலுகை முறையில் வழங்கப்படுவது போல் SC/ST  உழியர்களுக்கும் நாலு கட்டப்பதவி உயர்வில் ஓராண்டு சலுகை அளிக்கலாம். வணிகத்துறையில் இது போல் சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கருணை அடிப்படை வேலையில் சலுகை

தற்போது BSNLலில் கருணை அடிப்படை வேலைக்கு மதிப்பெண் முறை பின்பற்றப்படுகின்றது. 55 மதிப்பெண் பெற்ற விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பரிசீலனைக்குப்பின் 55 மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பங்கள் கூட நிராகரிக்கப்படுகின்றன. இது நியாயமான  நடைமுறையன்று. இந்த மதிப்பெண் வழங்கும் முறையில் SC/ST தோழர்களுக்கு சலுகைகள் BSNLலில் வழங்கப்படவில்லை. இது குறித்து JCM தேசியக்குழுக்கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டது.  உடனடியாக BSNLலில் கருணை அடிப்படை பணிக்கான தேர்வு முறைகளில் SC/ST  ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். 

உரிய நேரத்தில் மேற்கண்ட முக்கியப்பிரச்சினைகளை எடுத்துரைத்த மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி அவர்களுக்கு நமது நன்றிகள்.
கனரா வங்கிக்கடன் நீட்டிப்பு 

BSNL  ஊழியர்களுக்கு பல்வேறு கடன்கள்  வழங்குவதற்காக 
கனரா வங்கியுடன் 27/01/2014  அன்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

01/12/2013 முதல் 31/12/2014 வரை உடன்பாடு அமுலில் இருக்கும்.

தனிநபர் கடன் அதிகபட்சம் 10 லட்சம் வழங்கப்படும்.
தற்போதைய தனிநபர்கடன் வட்டி விகிதம் 12.95 சதம் ஆகும்.

வீட்டுக்கடன் 75 லட்சம் வரை வழங்கப்படும்.
வட்டி விகிதம் 10.2 சதம் ஆகும்.

சனி, ஜனவரி 18, 2014

அஞ்சலி







அஞ்சலி 





நமது அகில இந்திய சங்கத்தின் பொருளாளர் தோழர்  P L தோவா அவர்கள் இன்று 17-1-2014 இயற்கை எய்தினார் . அன்னாரின் மறைவிற்கு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம் 

புதன், ஜனவரி 08, 2014

OLIKKATHIR PONVIZHA 06-01-2014


 


 

 


 























QUPTHA -DEATH ANNIVERSARY

















கடலூர் ஒலிக்கதிர் பொன் விழா 06/01/2014

கடலூர் ஒலிக்கதிர் பொன் விழா 06/01/2014 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.50 ஆண்டு ஒலிக்கதிரின் வழிதடத்தை,ஒலிக்கதிரின் சிந்தனையை, மாண்பை விளக்கும் பல வண்ண தட்டிகள்,அதன் வரிகள் காலத்தை தாண்டி மனதை வருடும். அழகு மிளிர,கொள்ளை கொள்ளும் ஏற்பாடுகள், மாவட்டத்தில் எல்லையில்லா துன்பங்கள்,பெற்றிடுனும் ,சிலர் ஒதுங்கிட,தடுத்திட நிதி வழங்க மறுத்திட, என சோதனை வந்த பொழுதும் கண் துஞ்சாது பணி புரிந்து சோர்வில்லா இளைஞர் பட்டாளம் உழைத்திட வெற்றி பெற்ற ஒலிக்கதிர் பொன் விழா காலத்தை விஞ்சி நினைவுகள் நிற்க்கும்.
அணி பாரது, சங்க பேதம் மின்றி அனைவர்க்கும் பதாகை, விண்ணதிர சங்க கொடியேற்றம், தோழர் ஜெயபால்  குப்தா நினைவு அஞ்சலி,
தோழர் ஆர்.கே துவக்க உரை,மாநிலசெயலர் சிறிய,சீரிய உரை சிறப்புரை என தலைவர்களின் அணிவகுப்பு, சிறப்பு சேர்த்த அவர் தம் உரை, நிஜ நாடகம், கவிஅரங்கு எதிர் பார்ப்பை விஞ்சிய, வரவேற்புகுழு திணறும் அளவு தோழர்கள் பங்கேற்ப்பு, தோழர் தா.பாண்டியன் காலை முதல் கண்டு ரசித்து மாலை நிறைவு பேருரை நிகழ்த்திய பாங்கு என சிறப்புகளை பட்டியல் இட்டாலும்  நினைவை அகலாத கடலூர் ஒலிக்கதிர் பொன் விழா காலத்தை விஞ்சி நிற்கும்.
சின்னபையன் என எகடியம் செய்து ,விளித்தாலும் சின்னபையன் நான் அல்ல சீர்மிகும் ,விஸ்வரூபம் காட்டிய வாமனன், வாமனன் என நிரூபித்த எனது அன்புதோழன் ஸ்ரீதர் ,மற்றும் தோழர்களுக்கு நன்றி.









 


 
 


புதுவையில் இருந்து 8 தோழியர்கள் உட்பட்90 பேர் கலந்துகொண்டனர்.அனைவர்க்கும் நமது நன்றிகள்.